சினிமாவின் மொழியிலக்கியத்தை Realism, Magical Realism என்று சொல்லி கேட்டதுண்டு. நிதர்சனத்தைப் பொறுத்தவரையில் சினிமா என்பது Surrealism, which is something beyond the reality. அதனால் தான் கற்பனைக்கு மீறிய நிகழ்வுகளை சித்தரிக்கும்போது அதன் சுயத்தன்மையை சினிமாத்தனம் என்று கடக்கச் சொல்வார்கள். ஒரு திரையில் அசைவுகளற்ற தொனிக்குள் இயல்படும் காட்சிகளும் குரல்களும் நமது வாழ்க்கையை சித்தரித்துவிடுகிறதென்றால் அது எத்தனை பெரிய ஆர்ச்சர்யம்.
“அட நம்ம வாழ்க்கை அப்டியே தெரியுதே”
“அட இப்டிலாம் நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும்”
இந்த இரண்டும் தான் சினிமா. ரசனையுள்ள கௌதம் மேனன் சினிமா.
நிதர்சன நிமிடங்களை நிச்சயம் கெளதம் மேனன் திரைப்படங்களில் உணர முடியும். காதலுக்கு மட்டுமல்ல உறவுகளுக்கும் அதன் பிடிப்புகளுக்கும் கூட பல referenceகளை தர வல்லது
அம்மா-அப்பா-தங்கை-காதலி-மனைவி என்று உறவுகளுக்கு ஒவ்வொரு பெயரை வைத்தாலும் அதன் மையப்புள்ளி அன்பு தான் என்பதை அதிகம் உணர்பவர்கள் வாழக்கையை ரசிக்கிறார்கள். அப்படியொரு ரசனையின் பரிசு கௌதமின் வாரணம் ஆயிரம்.
படத்தின் தொடக்கத்தில் கௌதமின் குரலில் ஒலிக்கும் “உறவுகள் தொடர்கதை” பாடலில் வரும் “இனியெல்லாம் சுகமே” வரிகள் படம் முழுக்க வரும் சுகத்திற்கான ஒரு முன் அறிவிக்கை என்பது படத்தின் முடிவில் தான் தெரியும். தான் இயக்கும் படத்தில் தன்னை இயக்கிய அப்பாவின் பெயரையும் சேர்த்து கௌதம் வாசுதேவ மேனன் என்று உருமாறியிருந்த படம் இது.
இதையே தான் இறுதிக்காட்சியில் மாலினி சூர்யாவிடம்
குழந்தை சூர்யா பிறந்ததும் கிருஷ்ணன் தனது கைகளிலேந்தி “Heyyy. He is good looking” என்று சொன்ன அடுத்த நொடி “உன்ன மாதிரியே.. அப்டியே” என்று மாலினி கொடுக்கும் பதிலில் அவர்களது காதல் சொல்லப்பட்டிருக்கும்.
சூர்யாவை கையில் தாங்கிக்கொண்டு கிருஷ்ணன்,
“கைல பத்து காசு இல்ல. ஆனா உலகத்துலயே சந்தோஷமான மனுஷன் நான்.
வாழ்க்கையில இவனுக்குன்னு என்ன எழுதிருக்குன்னு தெரில அப்படி எதும் தப்பா எழுதிருந்தா நான் அத திருத்தி எழுதுவேன்.
Anything for you…. And now anything for him” என்று பேசி முடிக்க முடிக்க மாலினியின் கண்கள் கிருஷ்ணனை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருக்கும்.
ஒரு நல்ல கணவனாக இருந்தவர் நல்ல அப்பாவாக மாறுவதை பார்க்கும் மகிழ்நிலை அது.
லாரியில் “Its easy. Just like driving a car. I am your good dad. And Don’t tell Amma.. okay” என்று கிருஷ்ணன் சொல்லும்போதும் சூர்யாவின் பார்வை முழுக்க ஆர்ச்சர்யம் தான். பின்னணியில் “நீங்க தான் என்னோட ஹீரோ Daddy” என்ற வசனம் ஒலிப்பது அதற்கான அருஞ்சொற்பொருள்.
அப்பா சொல்வதையெல்லாம் கேட்கும் மகனாக தான் சூர்யாவின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அது வேணாம். உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு.
அவங்க எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசு. I have no problem”
அடுத்தநாள் தோழிகளுடன் சூர்யா வீட்டில் அமர்ந்து பேசுவது போல காட்சி வரும்.
“கஷ்டப்பட்டு Work out பண்ணி இதெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்க” என்று ஒரு ஹீரோவாக அப்பா சொன்ன தைரியம் தான் ஆர்த்திக்காக சண்டையிடவும், கல்லூரியில் ragging செய்யும் சீனியர்களுடன் மோதவும் செய்யும்.
Cricket கற்றுக்கொடுக்கும்போது “இப்டி பிடிச்சா out-swinger” என்று சொல்வதைக் கற்று கல்லூரியில் out-swingerல் wicket எடுப்பார் சூர்யா.
அப்பா சொல்லி சூர்யா மீறும் விஷயங்கள் இரண்டு.
சூர்யா : “பண்ணதில்ல Dad தொட்டது கூட இல்ல”
கிருஷ்ணன் : Good
ரயிலில் மேக்னா “கிடச்சுதா நீ கேட்ட Oxygen. தம்மு தானே” என்று கேட்டதும் “ச்ச. ச்ச.. I don’t smoke” என்று பெருமையாக சொல்லும் சூர்யா அதே மேக்னாவின் இறப்பின் சோகத்தால் போதைக்கு அடிமையாவான். மீண்டு வருவதற்காக அவனது அப்பா-அம்மா அவனை சிறிது காலம் வெளியில் அனுப்புவார்கள். காஷ்மீரில் நினைவுகளின் வலி தாங்காமல் புகையை பற்றவைத்து பின்னர் அப்பாவின் ஞாபகத்தில் தூக்கி கீழே வீசுவான் சூர்யா. அப்பொழுது அப்பாவின் சொல்ல மீறாது திரும்புவான்.
மற்றொன்று அப்பாவின் கையை விட்டது.
அதற்கு எதிர்வினையாக கிருஷ்ணன் இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பும் சூர்யா நினைவுகளில் கூறும் வசனம் இது.
I am Sorry daddy”
ஆனால் இந்த மன்னிப்பினை கேட்க கிருஷ்ணன் இருக்க மாட்டார். அவரது மரணம் தான் மிஞ்சியிருக்கும்.
“முதல் தடவ பாத்தப்ப அவர் மேல இருந்த கோபமெல்லாம் போய்டுச்சு. என்ன handsomeஆ இருப்பார் தெரியுமா உங்க அப்பா. இப்பவும் அப்டி தான். He just swept me off my feet. ஒரு second ல” – இது தான் மாலினி தனது கிருஷ்ணனின் முதல் பார்வையை சொல்லும் காட்சி.
இதையே கிருஷ்ணன் மாலினியிடம் காதலைச் சொல்லும்போது “இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு அழக பாத்திருக்க மாட்டாங்க. And I am in love with you” என்று வரும்.
“காதல்னா என்னனு தெரிஞ்சது. அம்மாவ முதல்-ல பாத்தப்ப உங்களுக்கு எப்டி இருந்துச்சும் தெரிஞ்சது” – ரயிலில் மேகனாவைக் காணும் சூர்யா காதலை உணரும் தருணத்தில் நினைத்துக்கொள்வது அப்பா அம்மா காதலைத்தான்.
“I fall in love with you, Meghna. கேவலமா நினைக்காத உண்மையிலேயே. உன்ன பாத்தவுடனேயே bounding heart beat.. இளையராஜா background score. வெள்ள டிரஸ் போட்ட பொண்ணுங்க.. எங்க அப்பாக்கு எங்க அம்மா பாத்த உடனே ஆன மாதிரி.. எல்லாம் ஒரே secondல. I am in love with you meghna”
என்று காதலை வெளிப்படுத்தவும் அப்பா அம்மாவுடைய காதல் துணைக்கு தேவைப்பட்டது.
காதலை ஏற்க மறுக்கும் மேக்னாவிடம் “எங்க இருந்தாலும் தேடி வருவேன். I will come in to your life. I will sweep off your feet” என்று அம்மா சொன்னதை தான் சூர்யா proposalக்கு பயன்படுத்துவான்.
கெளதம் மேனன் ஒரு சாதாரண இயக்குனர் அல்ல. He is a film-maker who can showcase one’s inner mind. அழகியல் சார்ந்த படைப்பாளி.
March 7, 2017 at 9:09 am
என்னைப் போல் Gautham’ன் படங்களை வேறு யாரும் ரசிக்க முடியாது என்ற கர்வம் எப்பொழுதும் எனக்குள் உண்டு. அதை சுக்குநூறாக உடைத்துவிட்டீர். வாழ்த்துக்கள் நண்பா…
LikeLiked by 1 person